Friday, April 29, 2011

ப‌டிக்க‌ ம‌ற‌க்காதீங்க‌...


சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"
வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"
அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...."
"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?"
"அதில்லை..."
"இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?"
"இல்லை"
"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?"
"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.


"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று
சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.
மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா? 




மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.
எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.
சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா".
சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?"




"ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?"
அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.
நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.


சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?"
நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா?
இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்துவிடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்

தொலைபேசியும் முஸ்லிம் பெண்களும்



முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம்
சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர்
கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம்
காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம்
பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும்
நிகழ்ந்து வருகின்றது.

இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:

1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன்
போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன
எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை
கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி.
வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.

6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி
அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசி

செய்து கொடுப்பது)

7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம்
வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ
அனுமதிப்பது.

8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை
தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய
ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த
உதவுகின்றது.

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

'இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத்
தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக்
கொள்ள வேண்டும்''. (அல்குர்ஆண்: 24:37)

''நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்)
பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான
நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள்
நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆண் 33:32)

1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை
கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச்
சொல்லுங்கள்.

2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த
சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது
சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து
வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும்
பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு
(அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.

4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம்
மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச்
செல்வது நல்லது.

5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக்
கொடுக்க‌ வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர்,
கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும்
யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க‌ வேண்டாம்.

7.தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது
உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச்
செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த
தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ
முற்படாதீர்கள்.

ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள்

Sunday, April 24, 2011

எங்கே செல்கிறாய்? (Poem)

எங்கே செல்கிறாய்?

மடிந்து விழுந்து நெழிந்து தவழ்ந்து புரண்டு விரைந்து
சிதறும் புணலில்...
இடிந்து குழைந்து அழிந்து விழுந்து விரண்டு மறைந்த பதராய்…
எழுந்து விளைந்து குவிந்து அலைந்து திரண்டு ஒளிர்ந்த
படரும் சுடரில்...
ஒடிந்து தளர்ந்து குணிந்து வளைந்து மிரண்டு அழிந்த சிறகாய்…

நீ… எங்கே செல்கிறாய்?

அம்மா வாசைப் பௌணர்மியாய்
ஆழிப் பேரலை அகிம்சையாய்
இம்மையின் மறுமையாய்
ஈராக்கின் அமைதியாய்…

நீ… எங்கே செல்கிறாய்?

இறக்கப் பிறந்த நீ…
பறக்க நினைத்தாய்!
உயரப் பறக்க
சிறகை ஒடித்தாய்!

நீ… எங்கே செல்கிறாய்?

ஒரு நாள் நீ வல்லரசு!
இன்னாள்…இல்லை…
உக்கில்லை ஓர் அரசு!
நீ சொன்னாய்… பரவாயில்லை…
இன்று நான் நான் அல்ல…
இன்று நான் நாம்!
ஐம்பது, ஐம்பது சிற்றரசு! பெரிசு…ஐம்பதா ஒன்றா? ஐம்பது…

நான் புதுப்பாவை… எனக்கேன் பொல்லாப்பு?
பேரரசு பெருமைக்கா?
போர் செய்ய முட்டாளா?

தேசியம் தேனாக…
ஜன நாயகம் பாலாக…
கபிடலிஸம் மதுக்கோப்பை!
கொம்யூனிஸம் விலைமாது!
இஸ்லாம் இருக்கட்டும்…அழையா விருந்தாளி!
மொடர்ண் இஸ்லாம்…
ஆஹா… உல்லாசம்!


நீ பாவை அல்ல – அப்பாவி
இல்லை - நீ பாவி!
மேற்குலகின் காலனி…

அண்ணார் என்றான்- ஐரோப்பா
அவனிடமிருந்ததோ இராட்சத சிலந்தி வலை
பலம் அல்ல – வெறும் பிரமாண்டம்

ஏமாந்தாய்…அண்ணார்ந்தாய் - கொக்கின் கழுத்து கட்டையானது அண்ணார்ந்தாய் - அவனை(அல்லாஹ்வை) அழைக்கவல்ல
அன்னியனை அரவணைக்க!

நீ… எங்கே செல்கிறாய்?

விடுதலை என் முற்றம்
சுதந்திரம் என் கொல்லை
அதில் வீடு உலகாயதம்
பெண்ணாட்டி அமெரிக்கா!
வைப்பாட்டி ஐரோப்பா!
விளையாட இஸ்ரவேலு…
வாரிசு டொமோகரசி!
வழக்கென்றால் ஐயன்னா நாவன்னா…
இதுதானே உன் உலகம்…

நீ… எங்கே செல்கிறாய்?

மின்னல் மிலேனியத்தில் மில்லத்துந் இம்ராஹீமா…
ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவுமா?
குர்ஆனும் ஏடுதானே!
ச்ச்சும்மா வாசிக்க வைத்திருப்போம்…
அதில் பூஜிக்க ஒன்றுமில்லை…
இதுதானே உன் கொள்கை…

நீ… எங்கே செல்கிறாய்?
அக்ஸா அலுப்பென்றால் கஃபாவை கைமாற்றுவோம்!
விசுவாசியின் குருதி அதை விட மேலானது…
அதையே ஓட்டி விட்டோம்…
இது என்ன கல்தானே…
இதுதானே உன் தீர்வு

 நீ… எங்கே செல்கிறாய்?

மறுமையா மண்ணாங்கட்டி…
இதுதான்(இம்மை) உள்ளங்கை நெல்லிக்கனி!
கேள்வியா கணக்கா…ஐய்யோ… ஐய்யோ
நாளைக்கு பிளைப்பைப் பாரப்பா…
இதுதானே உன் வாதம்

நீ… எங்கே செல்கிறாய்?

நில்… நில்…அக்கினிப்பிளம்பொன்றில் அகோரமாய் ஓர் காட்சி!

கருகிக் கருகிக் கதறிக் கதறி ஓர் ஓசை!

அதோ…அதோ அது பிர்அவ்னா?

இல்லை அது ஹாமான்…

இல்லை நம்ரூத்… ஐய்யோ அல்ல அது ஜஹ்ல்…

அபு ஜஹ்ல்…

நீ… எங்கே செல்கிறாய்?

Friday, April 22, 2011

மரணம் ஒரு பக்கத்து நண்பன்...

    என்னதான் உறுதியாக நம்பியிருந்தாலும் மரணம் அடிக்கடி மறந்தே போகிறது... மையத்து வீடுகளில் முழுக் கபனில் முகம் மட்டும் பார்க்கும் போதும் மையவாடியில் கபுருகளுக்கு மத்தியிலிருக்கும் போதும் ஏற்படும் உணர்வு, வாழ்க்கையில் அன்றாட வீதிகளில் நடக்கும் போதும் ஏனோ தொலைந்துவிடுகிறது.




இருட்டு பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் படர்ந்த நிலவற்ற பொழுதொன்றில் மண்ணறைக்கு முன்னால் நின்றபோதுதான் தொடை நடுங்கத் தொடங்கியது...

இந்த மரணம் எல்லாக் கனவுகளையும் பறித்துக்கொள்ளும்... எல்லா நிம்மதிகளையும், ஆடம்பரங்களையும் மண்ணோடு சேர்த்துப் புதைத்துக் கொள்ளும்... இந்தப் பூமியின் மொத்த அழகிலிருந்தும் அழைத்துச் சேன்று ஒரு கருப்புக் குழிக்குள் வைத்துவிடும் என்பது புரிந்தது.

எவ்வளவுதான் திரும்பிப் பார்த்தாலும் மரணம் ஒரு சொட்டாவது தெரிவதில்லை. நம் நிழல்களுக்குள் பிணைந்து அது சதாவும் நம்மைத் துரத்துகிறது. எம் எல்லாத் தெருக்களிலும் நம்மோடு சேர்ந்து அதுவும் சமாந்தரமாக நடக்கிறது. ஆத்ம நண்பன் போல் பக்கத்திலே அமர்ந்திருக்கிறது. நிழல் மாதிரி கூடவே வந்தாலும் வேண்டாத பொழுதொன்றில் அது அழைத்துக் கொண்டு தான் போகப் போகிறது.
நினைக்க நினைக்க மனது நடுங்குகிறது. மலக்குல்மௌத் உயிரைப் பித்தெடுக்கும் நாளில் ஏற்படப் போகும் வலியின் கனதி உலகிலுள்ள எந்த நோவுக்கும் ஈடாகாது. வலிக்க வலிக்க... கதறக் கதற... அவர் உயிரை பித்துக் கொண்டு போவார்... சிறுபிள்ளையெனக் கெஞ்சினாலும் அவர் விடவா போகிறார்...? சின்னச் சின்னக் கத்திகள் கொண்டு உடல் முழுக்க யாரோ கீறுவது போல் இருக்கிறது. இந்த வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் அந்தத் தருணத்தின் அனுபவத்தை இதுவரையாரும் சோல்லவில்லை.

இந்த வாழ்க்கைக்குப் பிரியாவிடை கொடுப்பது ஓர் அழகிய நிகழ்வுதான். படைத்தவனின் மகிமை இங்குதான் புரிகிறது.

குளிப்பாட்டி... ஆடைஅணிவித்து... தொழுகை நடத்தி... பாவங்களுக்காப் பிரார்த்தித்து... சில சோட்டுக் கண்ணீர்களோடு இதுவரையில் மெத்தையில் இருந்தவனை மண்தரையில் வைத்து மண்ணால் மூடிவிட்டு வருகின்ற காட்சி பிறப்பைவிடவும் அழகாத்தான் தெரிகிறது. பிறந்தபோது சிரித்து மகிழ்ந்த அதே முகங்களில் கண்ணீரும், கவலையும். சிலபோது புரிகிறது சோகமும் ஒருவகை அழகுதானென.

இருப்பினும் புதைகுழிக்குள் படுவது வேதனைதான் அதில் எந்தச் சுகமும் இருக்கப்போவதில்லை. அங்கு படுகின்ற ஒரு துளி வேதனையாவது வெளியில் இருப்பவர்களுக்குக் கேட்பதில்லையே...! அந்தக் கொடூர நிகழ்வை எப்போது நினைத்தாலும் விழிகளின் தொங்களிலிருந்தும் கண்ணீர்த் துளிகள் உருண்டு வருகின்றன. என்ன சேய... பிறந்தவனெல்லாம் இறந்துதானே ஆக வேண்டும் என்ற நினைப்பில் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது...

இதிலென்ன வேறுபாடு இருக்கிறது. ஒருவன் வாழப் பிறப்பது போல இறப்பும் இன்னொரு வாழ்க்கைக்கான பிறப்புத்தானே. மரணமென்றும் இறப்பென்றும் அழைக்கின்றோம் பெயர்மட்டும் வித்தியாசம். பிறப்பு போல இறப்பும் கொண்டாடக்கூடிய ஒன்றுதான்.. ஏனெனில் அது வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கான இடமாற்றம்.
அது ஒரு முடிவற்ற வாழ்க்கை... எந்தக் கனவுகளையும் கைகளில் ஏந்திக் கொண்டு துயரமில்லாமல் நடக்கலாம்.
ஆனால்ஒன்று, நினைத்தமாதிரி அந்த வாழ்க்கை கிடைப்பதில்லை. போட்டியில் வெற்றி பெறாமல் பரிசு கிடைக்காது. இந்த வாழ்க்கையின் வெற்றியில் தான் மறுமையின் மொத்த நிம்மதியும் தங்கியிருக்கிறது. சுவனம், நரகம் இரண்டிற்குமான பாதையை இறைவன் சொல்லித்தான் தந்திருக்கிறான். நாம் நடப்பதைப் பொருத்து வெற்றியோ தோல்வியோ எழுதப்படுகிறது. படைத்த இறைவனுக்குப் பிடித்தமாதிரி வாழ்பவனுக்கு வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் ஒரு புதிய தொடக்கமா இருக்கும்.. இல்லாதவனுக்கு அது ஒரு கருப்புப் பக்கமாக இருக்கும்.

மரணம் ஒவ்வொருவரினதும் நெருங்கிய பக்கத்து நண்பன்தான் எப்போதாவது அவன் நிச்சயம் அழைப்பான். அப்போது அந்த அழைப்பை எம்மால் புறக்கணிக்க முடியாமல் இருக்கும். எல்லாக் கனவுகளையும் வைத்து விட்டுப் பிரியவேண்டியதுதான்.

இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்


மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன. "இவ்வாறு இஸ்லாத்தில் இணைந்துள்ளவர்களில் பல பிரபலங்கள்  இருப்பது, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் பொய்ப் பிரச்சரத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகி அச்சமுற்ற நிலையில் வாழும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஊட்டச் சக்தியாகத் திகழ்கிறது" என்று முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையான இஸ்லாத்தை பிரிட்டிஷ் வெள்ளையர்களுக்கு விளக்கிச் சொல்லும் பெரு முயற்சியில் உள்ள பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்ஸில், பிரிட்டனின் முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் அஹ்மத் டோப்ஸன் என்பாரைத் தமது புதிய குழுவின் தலைவராக நியமித்துள்ளது.
முன்னாள் பிபிசி இயக்குனர் யஹ்யா பிரிட் (ஜொனாதன் பிரிட்), கிருத்துவத்தில் இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் பற்றிய தமது தொடர் ஆய்வுகள் மூலம் இஸ்லாத்தைத் தழுவிய புதிய முஸ்லிம்கள் எண்ணிக்கை மொத்தம் 14,200 என்று தீர்மானித்துள்ளார். இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் பற்றிக் சென்ற வாரம் குறிப்பிடுகையில், "அமெரிக்காவில் மால்கம் எக்ஸ் (Malcom X) இஸ்லாத்தில் இணைந்து அமெரிக்கக் கருப்பினத்தவர்களுக்கு நலன் சேர்த்தார். மேலும், இஸ்லாத்தைத் தற்போது இங்குப் பார்க்கப் படும் அந்நியத் தன்மை போலல்லாமல், ஒரு தேசிய அளவிலான மார்க்கமாக அங்கு மாற்றியிருந்தார். அதுமட்டுமின்றி, இஸ்லாத்தின் சமநிலையான சீரமைப்பு, உறுதியான நம்பிக்கை, அதன் அழுத்தமான ஆன்மீகம் ஆகியன தமக்கு எவ்வாறு மனநிறைவைத் தந்தன என்பதையும் அவர் விளக்கிச் சொன்னார். பிரிட்டனிலுள்ள வெள்ளையர்களை இஸ்லாத்தின்பால் இலகுவாகக் கொண்டுவர அவரைப் போன்ற ஒரு தலைவர் இங்குத் தேவை" எனும் கருத்தை பிரிட் வலியுறுத்தினார்.
ஹெர்பர்ட் ஹென்ரியின் கொள்ளுப் பேத்தியான எம்மா கிளார்க்கும் இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். முன்பு வேல்ஸ் இளவரசரின் தோட்டங்களின் வடிவமைப்புப்  பொறுப்பில் இருந்த இவர், தற்போது ஒரு பள்ளிவாசல் தோட்டத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் உரையாடும்போது, "நான் இஸ்லாத்தை ஏற்றது சந்தேகத்தின் பிடியில் சிக்கியிருந்த மேற்கத்தியக் கலாச்சர நெறிமுறைகளில் இருந்து மிகவும் வெறுப்புற்றதாலும் அதனைச் சுற்றியுள்ள அசிங்கங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே" என்று குறிப்பிட்டார். இவருடைய பாட்டனார் ஹெர்பர்ட் 1908 முதல் 1916 வரை பிரிட்டனுடைய பிரதமராக இருந்து, முதல் உலகப் போரில் பிரிட்டனுடைய வெற்றி வாகைக்குத் தலைமை வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இஸ்லாத்தைத் தழுவியவர்களில் பெரும்பாலோர் சார்ல்ஸ் ஈஸ்டன் எழுதிய 'Islam and the Destiny of Man' (இஸ்லாமும் மனித விதியும்) எனும் புத்தகத்தினால் மிகவும் ஈர்க்கப் பட்டவர்கள் ஆவர். "எனக்கு வரும் ஆயிரக்கணக்கான கடிதங்களில், மனிதர்களின் மனோஇச்சைகளைப் பின்பற்றிடும் சமகாலக் கிருத்துவத்தின் நடைமுறையில் நம்பிக்கையிழந்து விட்ட நிலையில், அதுவல்லாத  இதைப் போன்ற ஓர் உண்மை மார்க்கத்தைத்தான் தேடினோம் என்ற கருத்து பரவலாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது" என்று ஈஸ்டன் கூறுகிறார்.
இஸ்லாத்தைத் தழுவிய The earl of Yarbrough (எர்ல் ஆஃப் யார்ப்ரௌஹ்) எனும் லின்கன்ஷைரிலுள்ள 28000 ஏக்கர் நிலச்சுவான்தார் ஒருவர் பத்திரி்கையாளர்களிடம் பேசும்போது, "நான் எனது பெயரை அப்துல் மத்தீன் என்று மாற்றியுள்ளேன். இஸ்லாத்தை ஆய்வு செய்யுங்கள்; அதன் அழகிய தன்மையை நீங்கள் உணர்வீர்கள் என்பதே நான் உங்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தியாகும்" என்று கூறினார். மாண்புமிகு அரசியவர்கள் பக்கிங்கம் ( Buckingham Palace) அரண்மனையில் வேலை செய்பவர்களுக்கு வெள்ளிக்கிழமைத் தொழுகையை நிறைவேற்றிட நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் என்பது மகிழ்வளிக்கும் தகவலாகும்!.
இங்குக் குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் பிரிட்டன் அரசாங்கத்தின் நேரடித் தொடர்பில் உயர்பதவிகளும் அந்தஸ்துகளும் தலைமைத்துவமும் அதிகாரமும் பெற்று நாடாளுமன்ற ஆட்சி அவைகளில் அமர்ந்திருந்த செல்வந்த மூதாதையரின் வழிவந்தவர்கள் ஆவார்கள். அவர்களது நாடு எப்போதும் வேறு யாராலும் ஆட்சி செய்யப் படாத ஒரு நாடு. அப்படிப் பட்டவர்களின் வழித்தோன்றல்களுக்கு என்னதான் நேர்ந்தது? அவர்களை அதிகாரம் மூலம் பலவந்தமாக இஸ்லாத்தைத் தழுவிட எவரும் நிர்ப்பந்திக்க வில்லை!
"எங்களுடைய உள்ளங்களுக்குக் கிடைக்கப்பெற்ற விவரிக்க இயலாத மன நிறைவின் வெளிபாட்டின் விளைவே எங்களது இஸ்லாத்தின் தேர்வாகும். இவ்வளவுக்கும் பின்னர் வெட்கம், பச்சாதாபம், தாழ்வு மனப்பான்மை போன்ற காரணங்களோ பிறர் என்ன நினைப்பார்கள் என்ற அச்ச உணர்வோ எனது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விடும் என்ற எண்ணமோ என்னை சக ஊழியர்களுக்கு மத்தியில் ஜும்மா தொழுகை நிறைவேற்றிடாமல் தடுத்திட முடியாது - அதுவும் அரசாங்கத் தலைமையகமாகிய பக்கிங்கம் பாலஸில் எனக்குத் தொழுகின்ற வசதி செய்து கொடுக்கப் பட்டு இருக்கின்றது எனும் நிலையில்" எனக் கூறுகின்றார் அரண்மனை ஊழியர்களில் ஒருவர.

இந்த வாழ்க்கை பற்றி...




இந்த வாழ்க்கை பற்றி நினைக்கும்போதே அதன் வசீகரம்தான் மேலெழுகிறது. அன்புள்ள வாழ்க்கை என்பது எவ்வளவு இனிமையானது. எத்தனை வசீ கரங்கள், வசந்தங்கள்... பூக்கள் நிறைந்த சோலை மாதிரி பார்க்கப் பார்க்க அழகாகத்தான்  இருக்கிறது இந்த வாழ்க்கை.
 
ஒரு குழந்தை பிறத்தல் என்பது எவ்வளவு கொண்டாட்டத்திற்குரியது. அது அணை கடந்த மகிழ்ச்சியை எல்லோர் மனதிலும் பரவச் செய்கிறது. அப்போது தாயும் தந்தையும் அடையும் மகிழ்ச்சி இந்தப் பிரபஞ்சத்தையே தழுவி நிற்கி றது. உயரப் பறக்கும் ஒரு பறவையின் குதூகலத்தோடு மனது சிறகடிக்கும் தருணமது.
ஒரு விளக்கு எத்தனை பேருக்கு வெளிச்சம் கொடுக்கிறது. அது போலத் தான் ஒரு ஜனனமும். அதன் வருகை யில் எல்லோரும் மகிழ்கிறார்கள்.

இந்தப் பூமியில் இன்னும் வாழாத ஒரு வாழ்க்கைக்காக அது பிறக்கிறது. எல் லையற்ற கற்பனைக ளுடனும் சாத்தி யங்களுடனும் அது வளர்கிறது. பின் இந்த வாழ்க்கையின் வசீகரங்களில் அது தொலைந்து விடுகிறது.

இந்த வாழ்க்கை எல்லையற்ற துன்பத்தை வைத்திருப்பதுபோலவே எல்லை யற்ற மகிழ்ச்சியையும் வைத்திருக்கிறது. ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு மகிழ்ச்சியை அது தருகிறது. குழந்தைப் பருவத்து மகிழ்ச்சியை யாரும் மறப்ப தில்லை. இன்னுமொரு முறை அந்த வாழ்வை வாழவே எல்லோரும் விரும்பு கிறார்கள். ஏனெனில், குழந்தைகளை யாரும் மறுப்பதில்லை. அவர்களை எல் லோரும் அங்கீகரிக்கிறார்கள். இருந்தாலும் அந்த அங்கீகாரம் பெரியவனாகும் போது கிடைப்பதில்லை.

இளமை இன்னுமொரு வசீகரம். காலை வெயில் மாதிரி தெம்புடன் கூடிய பருவமது. ஒவ்வொருத் தரும் அதில் ஒவ்வொரு மகிழ்ச்சியை அனுபவிக்கி றார்கள். ஏன், இளமையே வசீகரம்தானே!

முதுமையிலும் வசீகரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் அதில் ஒரு பலவீனம் வந்து அமர்ந்துவிடுகிறது. எல்லா வசீகரங்களையும் அது காவு கொண்டுவிடுகிறது.

 
குழந்தைப் பருவமும் முதுமைப்பருவமும் இன்னுமொருவரில் தங்கியிருக்க வேண்டிய சுமையை தோற்றுவித்துவிடுகிறது. எனவேதான் எல்லோரும் முதுமைக்கு அஞ்சுகிறார்கள். சுடுகாட்டுக்கு நடந்து போக சக்தியிருக்கும் போதே செத்துப்போகவேண்டும்என்று ஒரு கவிஞன் பிரார்த்தித்தது நினை வுக்கு வருகிறது. 


ஒரு குழந்தையை கொஞ்சுவதுபோல எந்த முதியவரையும் யாரும் கொஞ்சு வதில்லை. வயோதிபமும் ஒரு குழந்தைத்தனம்தான். இருப்பினும் யாரும் அதனைக் கண்டுகொள்வதில்லை. அவர் தன் எல்லா மகிழ்ச்சிகளையும் தன் நடுக்கத்திலேயே தொலைத்து விடுகிறார். மண்ணறையை அருகாமையில் இருப்பதாக கனவுகாணத் தொடங்குகிறார்.

இப்படி முப்பருவங்களைக் கொண்ட இந்த வாழ்க்கை பற்றி எழுத நினைக்கும் போது அதன் ஆனந்தமே மேலெழுகிறது. ஒரு மழைத்துளி தரும் ஆசுவாசம் போல, ஒரு தென்றல் தரும் இதம்போல, இந்த வாழ்க்கை இன்பமானதுதான்.

ஆனால், இந்த இன்பம் முடிந்துபோகும் என்பது தான் இந்த வாழ்க்கை பற்றி நாம் படிக்க மறந்த குறிப்பாகும். அன்று பள்ளிவாயலில் ஒரு வயோதிப ரைப் பார்த்தேன். அவரது முகத்தில் மரணத்தின் ரேகைகள் படிந்திருந்தன. அவர் அமைதியாக அல்குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தார். தனது வாழ்க்கையின் அந்திமத்தில் இருக்கும் ஒருவரின் மனநிலையை நினைத்துப் பார்க்கத் தொடங்கினேன். எல்லா நாளும் மரணங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக் கின்றன. வாழ்க்கைப் பாடத்தை நிறுத்திவிட்டு யாரோ ஒருவர் வெளியேறிக் கொண்டுதான் இருக்கிறார்.

மறுபடியும் இந்த வாழ்க்கை பற்றி நினைக்கும் போது ஆனந்தமே மேலெழுகி றது. ஏனெனில், இந்த வாழ்க்கையின் புறஅழகில் நாம் வீழ்ந்துபோயிருக்கின் றோம். நினைவுக்கெட்டிய காலத்திலிருந்தே எல்லோரும் மகிழ்ச்சிகளை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். வாழ்க்கையின் இன்பமான பொழுதுகளை அடிக் கடி நினைவுபடுத்துகிறார்கள். ஒரு விருந்தில் அமர்ந்துகொண்டு அதனை மீட் டிப் பார்க்கிறார்கள். தம் மகிழ்ச்சிகளுக்கு வெற்றிகளுக்கு விழா எடுக்கிறார்கள்.

இந்த வாழ்க்கை இன்னும் சிலருக்கு சொர்க்கத் தையே கொடுத்திருக்கிறது. வாழ்க்கைபற்றிய கனவுகளில் அவர்கள் மிதந்து கொண்டிருக்கி றார்கள். இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு தரு ணத்தையும் இன்பமாக வாழ முயற்சிக்கிறார் கள்.

இன்னும் சிலருக்கு இந்த வாழ்க்கை சோகத் தையே கொடுத்திருக்கின்றது. எப்போதும் அவர் கள் கன்னத்தில் கைவைத்து அமர்ந்து கொண்டி ருப்பார்கள். இந்த வாழ்க்கையை சபித்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை தமக்கு இன் பத்தைக் கொடுக்கவில்லையென்று நொந்து கொள்கிறார்கள்.

இந்த வாழ்க்கை பற்றி சிந்திக்கும்போது நாம் இந்த வாழ்க்கை முடிந்துபோகும் என்று ஒருபோதும் சிந்திப்பதே இல்லை. அதனது ஆனந்தங்களை மட்டுமே சிந்திக்கிறார்கள். ஆனால், இந்த வாழ்க்கை முடிந்து அதற்குப் பின்னால் இருக்கும் வாழ்வின் இன்பம் பற்றி சிந்திக்கத் தவறிவிடுகிறார்கள்.

முடிந்துபோகும் வாழ்க்கையை முடிந்தமட்டும் இன்பமாக வாழவே நாம் முயன்றுகொண்டிருக்கிறோம். அதுபற்றியே சதா சிந்தித்துக்கொண்டிருக்கி றோம்.

என்னதான் ஆட்டம்போட்டாலும் என்றாவது ஒரு நாள் இந்த வாழ்க்கையிலி ருந்து விடைபெற்றுத்தானே ஆகவேண்டும். அந்த நிஜம் நம் சிந்தனையை ஒரு போதும் களைப்பதே இல்லை. இந்த வாழ்க்கைக்கு விடைகொடுக்க நாம் ஒருபோதும் ஆயத்தமாகவே இல்லை.

வாழ்க்கையின் பெறுமானத்தையும் யதார்த்தத்தையும் உணராதவன் இந்த வாழ்க்கையை அன்னார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். உணர்ந்தவனோ அதனைக் கால்களுக்குக் கீழே வைத்துவிட்டு முடிவில்லாத ஒரு வாழ்க் கைக்கு தயாராகிறான்.

ஒரு குழந்தைக்கு இந்த உலகில் இன்பத்தைச் சொல்லிக் கொடுப்பதுபோல இந்த உலகம் முடியும் என்பதனையும் அதன்பின் ஒரு வாழ்வு இருக்கிறது என்பதனையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்த வாழ்க்கையின் வசீ கரங்களை மட்டும் அதற்குப் போதித்துவிடக் கூடாது. இந்த யதார்த்தம் புரியும் போதுதான் யாரினது மரணத்தையும் தைரியமாக ஏற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும்.

இனி இந்த வாழ்க்கை பற்றிச் சிந்திக்கும்போது அது முடியும் என்பதும், இந்த வானம், இந்த அந்தி எல்லாமே அழியும் என்பதும் நம் நினைவுக்கு வரட்டும். அதற்காக யாரும் மகிழ்ச்சிகளைத் தொலைத்துக் கொள்ளத் தேவையில்லை. சந்தோஷம் மட்டுமல்ல வாழ்க்கை என்பது மறக்காமல் எம் நினைவில் இருந்தால் போதும்.


(2011 மார்ச் 'வைகறை' இதழில் வெளியானத

உனக்காக அழுகிறேன்...

உனக்காக அழுகிறேன்...






இருந்தாலும்... இருந்தாலும்... என்று சொல்லிப் பாருங்கள். உங்களாலும் அழா மல் இருக்க முடியாது என்று ஒருமுறை வாசித்தது நினைவில் இருக்கிறது. உண்மைதான், சொல்லிப் பார்த்தால் அழாமல் இருக்க முடியாது. அந்த ஒற்றை வரியின் முடிவில் உள்ள மௌனம் அதற்கு முன்னால் உள்ள ஏராளமான வார்த்தைகளை, நிகழ்வுகளை உள்ளடக்கியிருக்கின்றது.


நீ மிகத் தூய்மையானவன், நீ எங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைத் தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லைஎன்று சொல்லி மலக்குகள் மண்டியிட்டபோதே மனிதன் மகத்துவம் பெற்றுவிட்டான். அந்த நீல நிற வானவெளியும் பரந்து விரிந்த பூமியும் மனிதனுக்காகத்தான் படைக்கப்பட்டுள்ளன. எவ்வளவு மகத்தான ஏற்பாடுகளோடு அல்லாஹ் மனிதனை இந்த உலகில் வாழவைத்திருக்கின்றான்!


இந்த வாழ்க்கைக்கான மிகச் சரியான அர்த்தத்தை நாம் எழுதிக் கொண்டி ருக்கிறோமா அல்லது கிறுக்கிக் கொண்டிருக்கின்றோமா என்று எண்ணத் தோன்றுகிறது. வாழ்க்கைப் பாதை எம்மில் அநேகருக்கு கிறுக்கலாகத்தான் காட்சி தருகின்றது.


எத்தனையோ ஆயிரம் மனிதர்கள் இந்தப் பூமியில் வாழ்ந்து இறந்து போயி ருக்கின்றார்கள்... வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்... இன்னும் வாழ் வார்கள்... இறப்பார்கள்... ஆனால், மிகச்சிலர் தான் வாழ்வின் சரியான அர்த்தத்தை அடைந்து கொள்கிறார்கள்.


மேல் மாடிகளில் இருந்து மாநகர வீதிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எறும்புக் கூட்டங்கள் போல வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும். அவற்றின் நகர்வுகளில் வாழ்க்கையும் நகர்வது தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயணங்கள். பாதைகள் முடிந்தாலும் இந்த உலகில் பயணங்கள் முடிவதில்லை போலிருக்கிறது.


தன் வாழ்வில் ஆயிரம் சோலிகளை மனிதன் தன் தலைக்குள் வைத்துக் கொண்டுதான் அலைகிறான். அவைகளை முடித்துவிட்டு யாரும் மரணிப்ப தில்லை. தன் வாழ்க்கையின் பாதி அலைச்சலை வைத்து விட்டுத்தான் மனி தன் இறந்து போகிறான்.


தனக்கு எல்லா வசதிகளும் கைகூடி வந்ததன் பிறகு மிகச் சிறந்ததொரு வாழ்க்கையை வாழலாம். இறைவனை திருப்திப்படுத்தலாம் என்றுதான் மனி தன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அப்படி வாழ எவருக்கும் இந்த உலகில் வாழ்க்கை எஞ்சுவதில்லை. சொல்லி முடியும்போது வார்த்தை முடிந்து போவது போலத்தான் வாழ்க்கையும். அன்றாட வாழ்க்கையோடு சேர்ந்துதான் எல்லாம் சாத்தியமாக வேண்டியிருக்கின்றது.


தனக்குத் துக்கம் நிகழும் போது மட்டும்தான் மனிதன் இறைவனை நினைக்கி றான், அழுகிறான். அப்போதுதான் தன்னைப் படைத்தவனை அவன் உண்மையாக நெருங்குகின்றான். மாறாக, அவன் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவனை மறந்து தன் சந்தோசச் சாளரங்களைத் திறந்து கொண்டிருக்கிறான்.



அதனால்தான் என்னவோ இறைவனை மனிதன் மறக்கக் கூடாது என்பதற் காக எல்லோரிலும் அவன் ஏதோ ஒரு குறையை வைத்திருக்கிறான். இல்லையென்றால் இந்த உலகில் மனிதர்கள் கடவுளையே மறந்துவிடுவார் கள்.


மகிழ்ச்சி, துக்கம் என இரண்டிலும் நினைவுக்கு வர வேண்டியது படைத்த இறைவன்தான். அவன் நினைவில் அமிழ்வதும், அழிவதும் ஒன்றுதான். எல்லா உறவுகளை விடவும் நெருக்கமாக இருப்பது நித்திய அல்லாஹ்வின் உறவு மட்டும்தான். ஏனைய எல்லா உறவுகளும் விலகக் கூடியது, முறியக் கூடியது.
எல்லோருமே அவனுடனான உறவில் இடைவெளிகளை விட்டுத்தான் இருக் கின்றோம். நிறை வான அவனது அன்பைப் புறக்கணித்துவிட்டு யாரிடமோ அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.


மனித உறவுகளின்போது நாம் எல்லோருமே எமது நன்றிகளை சக மனிதர் களுக்கு வெளிப்படுத்துகின்றோம். எமக்கு உதவியவர்களை பக்குவமாய் நினைவில் வைத்துக் கொள்கிறோம். பிரதியீடுகளை வழங்குகிறோம். பரஸ் பரம் நேசம் வைக்கிறோம்.


ஆனால், மலக்குமார்களை எமக்கு சிரம்பணிய வைத்து எம்மை கௌரவப் படுத்தியவனை மறந்து விட்டு நிற்கிறோம். அவன் எத்தனை அருள்களை நிஃமத்துக்களை எமக்கு நிரப்பமாகத் தந்திருக்கிறான்! வைத்தியசாலைகளுக் குச் சென்று பார்க்கும் போதுதான் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள நிஃமத்துக்களை நாம் நினைத்துப் பார்க்கிறோம். அப்போதுதான் நம் ஈமானை நாம் முதன்முறையாகத் தொட்டு பார்க்கிறோம்.


அது கனக்கும்போது நாம் உண்மையாக அழுகிறோம். எத்தனை வகையான நோய்களிலிருந்து அவன் எம்மை பாதுகாத்திருக்கிறான். இறைவனே! உனக்கே புகழ் எல்லாம்!


மனிதனுக்கு இறைவன் வழங்கியிருக்கும் அருளும் அவன்மீது காட்டும் அன் பும் எவ்வளவு விசாலமானது. வானைக் கூட சிலவேளை அளந்து முடித்தா லும் அவன் அன்பை எம்மால் அளவிட முடியாது போகும்.


தன் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்ட இறை தூதர் (ஸல்) அவர்களே கால்கள் வீங்கும் வரை நின்று வணங்கி தன் நன்றியை இறைவனுக் குத் தெரிவித்தார்கள். நான் நன்றியுள்ள அடியானாக இருக்கக் கூடாதா?! என்று தான் ஆயிஷாவின் கேள்விக்குப் பதில் தந்தார்கள். பாவங்கள் நிறைந்த நாமோ அவனுக்காக ஒருதுளிக் கண்ணீரையாவது சிந்தாமல் இருக்கின்றோம். அவன் தன் அடியார்களுக்காக கீழ் வானத்தில் வந்து காத்துக் கொண்டிருக்கும்போது நாம் அவனிடம் செல்லாமல் இருக்கின்றோம்.


யாரோவாகிப் போனவர்களின் அழைப்புக்கெல்லாம் பதில் அளிக்கின்றோம், யாருக்காகவெல்லாமோ அழுகின்றோம். அந்த அல்லாஹ்வுக்காக அழாமல் இருக்கின்றோம்.


இறைவா! உனக்கு மாறு செய்தபோதும் உன் அன்பை நீ நிறுத்துவதில்லை. உன் நிஃமத்துக்களை துண்டிப்பதில்லை... அருளை இந்தப் பூமிக்கு அனுப்பா மல் விட்டதில்லை... நம் ஒவ்வொருவரின் ஆயுள் பாதையிலும் உன் அருள் கள் கொட்டிக் கிடக்கின்றன இருந்தாலும்... இருந்தாலும

Thursday, April 21, 2011

ஒரு முன்னாள் கிறிஸ்தவ பெண்மணியின் உருக்கமான கடிதம்!

அன்புள்ள அம்மாவுக்கு .......

அம்மா! நான் உங்களை விட்டு பிரிவதற்கு நான் இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டது தான் காரணம். நான் யாரையும் காதலிக்க வில்லை. எவருடனும் ஓடிபோய்விட வில்லை. இப்படிப்பட்ட தவறான வழியில் நான் ஒருபோதும் செல்லமாட்டேன். ஏனென்றால் நான் உங்கள் மகள். அம்மா நான் உங்கள் மீது மிகவும் அளவற்ற பாசம் வைத்துள்ளேன். இந்த உலகத்தில் உங்களை பிடித்த அளவிற்கு வேறு யாரையும் எனக்கு பிடிக்காது.


அவர் நேற்று ரஜிதா. இன்று ஹமிதா. இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்த குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பி.பி.ஏ., படிக்கும் பட்டதாரி பெண். சென்னை மண்ணடியை சேர்ந்த இப்பெண் டியூசன் சொல்லி கொடுப்பதற்காக, ஒரு முஸ்லிம் சகோதரரின் வீட்டுக்கு சென்று வரும் தருணங்களில், அவர் கண்களில் அந்த வீட்டில் இருந்த இஸ்லாம் குறித்த நூல்கள் தனிக் கவனம் பெற்றன.


அந்த நூல்கள் அவருள் பிரள யத்தை, அறிவுத் தாகத்தை தூண்டியதால் கடந்த ரமலானில் ரகசியமாக தண்ணீரை குடித்துவிட்டு நோன்பிருந்திருக்கிறார் வீட்டுக்கு தெரியாமல்!

நாளடைவில் இவரது இஸ்லாமிய தாகம் வெளிப்படையாக தெரிய வர, குடும்பம் கொந்தளித்திருக்கிறது. அதையும் மீறி இஸ்லாத்தை துணிந்து ஏற்றவர், அடைக்கலமும், சட்டஉதவியும் கோரி தமுமுக தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

அவரது குடும்பம் காவல்துறை உதவியுடன் தமுமுக தலைமையகம் வர, இவரோ அதிகாரிகளிடம் சரமாரியாக ஆங்கிலத்தில் உரையாட அவர்கள் திணறிதான் போனார்கள். தன்னை வற்புறுத்தி வீட்டுக்கு அழைக்கும் தாயாருக்கு 4 மணி நேரத்திற்கும் மேல் இஸ்லாத்தை எடுத்துரைத்து, தனது இஸ்லாமிய அனுபவத்தை விவரித்த பாங்கு சுற்றி நின்ற அனைவரையும் கவர்ந்து விட்டது.


சென்னை டெபுடி கமிஷ்னர் காமினி யின் அழைப்பின் பேரில் தமுமுக வினரின் பாதுகாப்புடன் சென்ற இவர், அங்கையே தனது நிலையை விளக்கியதுடன், அவருக்கும் இஸ்லாமிய அழைப்பு பணியை செய்ய, அவரே அசந்து விட்டார்.


இப்போது தமுமுகவின் வழிகாட்டலில் மதரஸா கல்வியை கற்கப் போகும் அவர், பாசத்தோடு வற்புறுத்தும் தாயாருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அவரது அனுமதியுடன் வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம்.
*-ஆசிரியர்.*


அம்மா நான் உங்களை விட்டு போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். எல்லாவற்றிற்கும் முன்னர் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நீங்கள் என்னைப் பற்றி கொண்டுள்ள எண்ணமும், என் நலனில் கொண்டுள்ள அக்கறையும் மகத்தானவை. அதே போன்று நான் என் உள்ளத்தில் தேக்கி வைத்துள்ள உங்கள் மீதான அன்பும், பாசமும் வார்த்தைகளில் வடித்துக்கூற முடியாதவை. உங்கள் அன்பு நிறைந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எனினும் நான் பெறப் போகும் முஸ்லிம் சன்மார்க்கக் கல்வி என்னைத் தடுத்து நிறுத்துகின்றது. இந்தத் தடை இல்லாவிட்டால், நான் ஒரு கணமும் உங்களை விட்டு பிரிந்திருக்க மாட்டேன். உண்மையில் மார்க்கத்தைக் கற்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும், நான் உணர்ந்திருப்பது தான் நான் உங்களை பிரிவதற்கு காரணம். இருப்பினும் உங்களைப் பற்றிய நினைவால் என் நெஞ்சம் நிறைந்திருக்கிறது. இனி கழியும் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடத்திலும் கருணையை எண்ணிப்பார்க்க போகிறேன். நீங்கள் என் மீது செலுத்தும் அளவற்ற கருணைக்கும், எனக்காக
காலமெல்லாம் செய்த தியாகங்களுக்கும் நான் எப்படித்தான் கைமாறு செய்வேனோ? உங்கள் தன்னலமற்ற உதவி, ஒத்தாசைகளை என் நாவினால் எப்படித்தான் வர்ணித்து முடிப்பேனோ? உங்கள் முடிவில்லாத அன்புடன் கூடிய மகத்தான பணிகளுக்கு எந்த விதத்தில் பிரதி உபகாரம் செய்வேனோ? நான் அறியேன் அம்மா! நான் உங்களை விட்டு பிரிவதற்கு நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது தான் காரணம். நான் யாரையும் காதலிக்க வில்லை. எவருடனும் ஓடிபோய்விட வில்லை. இப்படிப்பட்ட தவறான வழியில் நான் ஒருபோதும் செல்லமாட்டேன். ஏனென்றால் நான் உங்கள் மகள். அம்மா நான் உங்கள் மீது மிகவும் அளவற்ற பாசம் வைத்துள்ளேன். இந்த உலகத்தில் உங்களை பிடித்த அளவிற்கு வேறு யாரையும் எனக்கு பிடிக்காது.


என்னை வெறுத்து விடாதீர்கள்! உங்களுக்கு உண்மையிலேயே என்னைப் பிடிக்குமேயானால் என்னை வந்து பார்க்க வேண்டும். இந்த கடிதத்தை படிக்கும் போது நீங்கள் எப்படி வேதனைப் படுவீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.


என்னால் எனது நண்பர்கள் யாருக்கும் பிரச்சனைகள் தரவேண்டாம். ஏனெனில் இது நானாக எடுத்த முடிவு. யாரும் என்னைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத் திற்கு மாற்றவில்லை. நான் சுய நினைவோடு எடுத்த முடிவுதான் இவை. கணேஷ் மாமாவிடம் சொல்லி எந்த ஒரு போலீஸ் பிரச்சனையும் செய்ய வேண்டாம். நான் இப்போது மேஜர். எனக்கு எல்லா முடிவுகள் எடுக்கவும் உரிமை உள்ளதால் இஸ்லாத்தை ஏற்றேன். இதில் எந்த ஒரு
உள்நோக்கமும், யாருடைய வற்புறுத்தலும் இல்லை. நீங்கள் காவல் துறையினரை அழைத்து வந்து என்னை வரசொன்னாலும் நான் வரமாட்டேன். அது உங்களுக்கு அவமானத்தை தரும். அதை நான் விரும்பவில்லை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மூலமாக நான் மூன்று வருடம் இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வி கற்க செல்கிறேன். உங்களுக்கு தமுமுகவிலிருந்து போன் வரும். நீங்கள் தயவு செய்து அங்கு வரவேண்டாம். உங்களை பார்த்துப் பேச எனக்கு தைரியம் இல்லை. என்னைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து எந்த தப்பான முடிவும் எடுக்காதீர்கள். மனோஜின் படிப்பிற்கு என்னால் உதவ முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு வேறு யாரும் வேண்டாம். நீங்கள் இருவரும் என்னை வந்து பார்த்தால் போதும். என்னை அனாதை யாக விட்டு விடாதீர்கள். எல்லாருக்கும் இதைப் பற்றி சொல்லி புரிய வையுங்கள். உறவினர்கள். ஆயிரம் சொல்வார்கள், அதை கேட்டுக் கொண்டு என்னை ஒதுக்கி விடாதீர்கள். அம்மா
அழாதீங்கம்மா!

ப்ளீஸ்... மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் யாருக்கும் தரவேண்டாம். இந்த
லெட்டரில் நான் எழுதியதோடு போகட்டும் உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் (தமுமுக) அணுகவும்.

அம்மா, நீங்க ஆசைபட்ட மாதிரியே பி.பி.ஏ., முடித்து எம்.பி.ஏ., படித்து முடிப்பேன். நீங்கள் தயவு செய்து வீடு மாறினாலும். போன் நம்பர் மாற்றினாலும். எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும். அம்மா ப்ளீஸ் என்னை ஏற்றுக் கொள்ளுங்கம்மா. நான் உங்களை கஷ்டப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.


இப்படிக்கு..


*ரஜிதா (எ) ஹமிதா*



ஒரு மிஸ் கோல்...!

ஒரு மிஸ் கால்

பாதையில் ஊரும் பாம்பை பிடித்து தனது பைக்குள் போட்டுக் கொண்டது போல் தான் மொபைல் போன்களை நாம் எமது சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு அலைகின்றோம்.

ஒரு சிறிய மிஸ் கோல் என்றால் உடனே என்ன, அல்லது எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அதை பார்த்துவிட்டுத் தான் அல்லது விடையளித்துவிட்டுத்தான் அடுத்த விடயத்திற்கு எங்களை திசைதிருப்புகின்றோம்.

எமது கையிலிருக்கும் அந்த மொபையில் எந்தளவு எமக்கு பயனளிக்கின்றது என்று எம்மால் உறுதிப்படுத்துகின்றோமா என்றால் சத்தியமாக இல்லை.

சிலருக்கு எந்த வருமானமும் இருக்காது, ஆனால் பல கோல்கள் வந்துகொண்டே இருக்கும், பல்லாயிரக்கணக்கான பணத்தை செலவளித்து அதை வாங்கி பாவிக்கின்றோம்.



நாம் கடுமையான வேலையில் சிக்கி கடும் கஸ்டத்தில் வந்து தூங்குவோம், நல்ல ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது சிறிதாக ஒரு மிஸ் கோல் வந்துவிட்டால் ஏதோ தூக்கத்தில் பாம்பு கடித்துவிட்டது போல் அல்லது சுனாமி வந்தது போல் அசிர்ச்சியுற்று எழும்புகின்றோம், உடனே பதிலளிக்க முடிகின்றோம்.


அப்படியென்றால் எமது வீட்டுக்கு பக்கத்திலிருக்கும், எம்மை படைத்த, எமக்கு உணவளிக்கின்ற, எமக்கு நல்ல தூக்கத்தை தந்த அந்த அல்லாஹ்வின் வீட்டிலிருந்து அழைப்பு வருகின்றது அந்த அதிகாலை “சுபஹ்” வேளை, ஆனால் நாம் அயர்ந்து, ஆழ்ந்து தூங்குகின்றோம்.

ஒரு மிஸ் கோல் (Missed called)க்கு ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்தெழும்புகின்றோம்

ஆனால் பெறிய சத்தத்தில் அழைப்பு கேற்கின்றது, “வெற்றியின் பக்கம் வாருங்கள்” என அழைக்கப்படுகின்றது ஆனால் நாம் செவிடர்கலாக தூங்குகின்றோம்.

وَاسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلاَّ عَلَى الْخَاشِعِينَ [البقرة : )]

"பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்"

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ إِنَّ اللّهَ مَعَ الصَّابِرِينَ [البقرة : 153)]

"நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்”.

இவைகள் சிந்தனைக்கான சில வரிகள் மட்டும

சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.


1. அநாதையைப் பொறுப்பேற்றல்:
"
அநாதையைப் பொறுப்பேற்றவரும்நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும்நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி).

2. 
கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்:
"
எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை'ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காதுஎன நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ).
 
ஆயத்துல் குர்ஸி:

"
அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).
 
 ( Thanks to jblog )

Tuesday, April 19, 2011

Making use of our youth


Making use of our youth   





If Allah gives us 60 years to live, it comes to around 22,000 days (60x365). All these days Allah gives us to prepare for one day of interview with Allah. That is on the Day of Judgment. On that day, Allah will ask us some questions and He wants some correct answers. Allah is so merciful that He already told us what the questions will be through Quran and Ahadith. His mercy is so great that He even told us the answers to these questions. Now imagine, a student goes to write an exam. He opens his exam paper and finds the questions on one side. Then he finds that the answers to the questions are on the other side. Now after writing the exam, if this student still fails then what would we think of him? We would think that he is the dumbest person around. Well, tell you what, on the Day of Judgment, us people who knew the questions and answers will still fail! That is why; this is the time to wake up before we prove ourselves to be the dumbest of people.


Youth is the prime time of our lives. This is where people make important decisions like what to become in the future. Things you do in this time will most likely affect you throughout the rest of your life. That is why, it is important to bring Islam into your life during these days. Many people have the conception that when they get old then they will start practicing Islam. Probably you and I also have this feeling. But look at it this way: If you want to become a famous hockey player then you would start playing right from the youth. As you grow up, you will become better and better. But if you think that you will start playing when you are an old man then the chances of becoming famous is virtually zero. That's the reality. When we become old, we won't have enough energy to even stand up and pray.


Because youth is the prime time of your life, that is why it is very precious to Allah. Allah has prepared a shade on the Day of Judgment for those people who used to worship Allah in their youth. On that Day, there will be no other shade except the shade from the throne of Allah. Imagine standing outside on a very hot day under the sun for hours after hours. You would definitely want some shadow to rest under. But what about that Day when the sun will be much nearer to us and the heat will be much more extreme. Wouldn't you want some shade on that day? Of course you would.


You and I are all weak in terms of keeping our duties to Allah and Allah is aware of that. Allah wants that we keep trying to do our best. If a baby falls down while walking he tries to get up again and walk. He doesn't keep sitting down. Then a day comes when he does start to walk. Similarly, we should keep trying our best and not give up. A day will come when, Inshallah, we will be strong enough to obey Allah in every situation. Let us make a small promise to Allah right now that we will start doing the things for which we were sent to this life. Otherwise, we will be like that dumb guy who will fail the test on the Day of Judgment.


May Allah make it easy for us. Ameen

Thursday, April 7, 2011

வெற்றிக்குப் பத்து வழிகள்!

நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்
உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்?
உங்களின் கனவு மற்றும் இலட்சியம் என்ன?

உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய திட்டம் என்ன?

உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவுகொள்ளப் படுவீர்கள்?

ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பிறந்தோம்; வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!
மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.
இவ்வுலகில் முஸ்லிம்களாக வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் ஈருலகிலும் நினைவுகூரப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும் தம் மரணத்திற்குமுன் கீழ்க்காணும் 10 விஷயங்களைச் செய்து முடித்து விட்டால் போதும்.
தயாரா நீங்கள்?
1. உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்
முஸ்லிம்களாகிய நமக்குப் பல கட்டாயக் கடமைகள் உண்டு. உதாரணமாக, ஐவேளைத் தொழுகைகளை முறையாக நிறைவேற்றுதல், வாழ்வில் ஒருமுறையேனும் ஹஜ் நிறைவேற்றுதல், ரமலானில் ஒரு மாதகாலம் நோன்பு நோற்றல், ஜக்காத் கொடுத்தல், ஜமாஅத்தாக இருத்தல், தலைமைக்குக் கட்டுப்படல், அநீதியை எதிர்த்துப் போராடுதல் ஆகியன. ஹஜ்ஜைப் பொருத்தவரை பெரும்பாலான வசதியுள்ளவர்கள் நினைப்பதுபோல், "வயதான பின்னர் செய்வேன்" என்று தள்ளிப் போடாமல் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு விரைவான முக்கியத்துவம் கொடுங்கள். விட்டுப்போன தொழுகைகளுக்காகக் குற்றம் பிடிக்கப்படாமல் இருக்க, இயன்றவரை சுன்னத்-நஃபில் தொழுகைகளை அதிகப்படுத்துங்கள். அத்தோடு, "இனிமேல் எந்த ஒரு கடமையான தொழுகையையும் விட்டு விடமாட்டேன்" என்று இப்பொழுதே உறுதி மொழி எடுப்பதோடு, அதனை இந்நிமிடத்திலிருந்தே செயல்படுத்த ஆரம்பியுங்கள். "தொழாதவன் என்னைச் சார்ந்தவனல்லன்" என்பதும் "தொழாதவன் காஃபிராகி விட்டான்" என்பதும் "முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்குமிடையிலான வித்தியாசம் தொழுகை" என்பதும் எம்பெருமானாரின் அமுதவாக்கு என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.
2. கனவை நனவாக்குங்கள்
நல்லவற்றுள் எதையாவது நீங்கள் செய்ய விரும்புகின்றீர்கள் எனில், அதனைப் பின்னர் என்று தள்ளிப்போடாமல் உடனே செய்ய துவங்குங்கள். சீனப்பெருஞ்சுவரை நடந்து கடக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, பட்டதாரி ஆக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, டாக்டரேட் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? கலெக்டராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? சீன, ஜப்பானிய, அரபி மொழிகளைக் கற்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? எதுவாக இருந்தாலும் உடன் செயல்பாட்டில் இறங்குங்கள். ஒருபோதும் வாழ்வில் செய்யத் துடிக்கும் நல்ல விஷயங்களைத் தள்ளிப்போடாதீர்கள். கனவை நனவாக்குங்கள்!
3. பெற்றோர்களை மகிழ்வியுங்கள்!
நம் பெற்றோர்களே நமக்கு எல்லாம்! நமது மரியாதைக்கும் அன்புக்கும் கீழ்படிதலுக்கும் அவர்கள் உரித்தானவர்கள். அவர்களுடன் தினசரி குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிக்க முயலுங்கள். அவர்களுக்குப் பெருமை சேர்க்க முயலுங்கள்; ஒருபோதும் அவர்களின் மனதை வேதனைப்படுத்தி விடாதீர்கள். ஒன்றை எப்போதும் நினைவில் வையுங்கள்: "பெற்றோர்களை நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அல்லாஹ்வும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பான். பெற்றோர்கள் நம் மீது கோபமாக இருந்தால், அல்லாஹ்வும் நம் மீது கோபமாகவே இருப்பான்" என்று இஸ்லாம் கற்பிக்கிறது. ஆகவே, அவர்கள் மரணிக்கும்முன், அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு அவர்களை மகிழ்வாகவும் வைத்திருங்கள். அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களை நினைவுகூருங்கள்; அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்; அவர்களின் இலட்சியம் அல்லது நிறைவேற்ற நினைத்து முடியாலாகி விட்ட கடமைகள் ஏதாவது இருப்பின் அதனை நிறைவேற்றுங்கள்.
4. உலகைப் பாருங்கள்
நீங்கள் இருக்கும் இருப்பிடத்தில் மட்டுமே உலகைக் காண்பதாக இதற்கு அர்த்தம் கொடுக்காதீர்கள். அல்லாஹ்வின் அற்புதமான படைப்புகளைக் கூர்ந்து கவனியுங்கள். இயன்றால் ஃபாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா, எகிப்து, மக்கா போன்ற இஸ்லாமிய வரலாற்றை எடுத்தியம்பும் நாடுகளை வலம் வாருங்கள். குறைந்தபட்சம் உங்களைச் சுற்றியுள்ள கிராம, நகரங்களையாவது வலம் வாருங்கள். நிச்சயமாக, அது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதோடு, அல்லாஹ்வின் படைப்புகளையும் அதில் உங்களின் பங்கையும் குறித்து உங்களுக்கு விளக்கித் தரும்.
5. இஸ்லாத்தைப் படியுங்கள்; அதற்கு உயிர் கொடுங்கள்!
இந்த உலகில் நீங்கள் பிறந்ததற்கான காரணத்தையும் பிறப்பின் பயனை அடைவதற்கான வழிகளையும் அறிந்து கொள்ளாமல் நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போய்விடக் கூடாது. அது பின்னர் உங்களுக்கே பேரழப்பாக முடியும். ஆகவே இஸ்லாத்தைப் படியுங்கள். இறைமறையைத் திறந்து அதனை அர்த்தத்துடன் படியுங்கள். எம்பெருமானாரின் வாழ்வைப் படியுங்கள். இஸ்லாம் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? என்பதை உறுதிபடுத்துங்கள். அதனை உங்கள் தினசரி வாழ்வில் நடைமுறைப் படுத்துங்கள். இது ஒன்று மட்டுமே உங்களுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் பாதுகாப்பாக இருக்கும்.
6. திருப்பிக் கொடுங்கள்
ஏதாவது வித்தியாசமானதாகவும் அற்புதமானதாகவும் செய்ய முயற்சி செய்யுங்கள். ஒரு அனாதையின் வாழ்வாதாரத்துக்கு உதவுதல், ஒரு மரத்தை நட்டு வளர்த்தல், ஏழைகளுக்கு உதவி செய்ய ஃபண்ட் ஒன்று துவங்குதல், ஏழைகளுக்கு உணவளித்தல், தேவையில் இருப்போருக்கு இரத்தம் வழங்குதல், குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் கற்றுக் கொடுத்தல், யாருடைய பிரச்சனைகளையாவது தீர்த்து வைத்தல், லைப்ரரி ஒன்று உருவாக்குதல், வசதியற்ற மாணாக்கருக்குக் கல்வி கற்க ஏற்பாடு செய்தல், வட்டியின்றித் தேவையுடையோருக்குக் கடனுதவி செய்யக் குழு ஏற்படுத்துதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கப் பயிற்சியளித்தல், குடிநீர் இல்லாத வீடுகளுக்குக் குடிநீர் கிடைக்க வசதி ஏற்படுத்துதல்..... இப்படி எதையாவது நீங்கள் மரணிக்கும்  முன்னர் இவ்வுலகுக்குத் திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். உங்களின் மரணத்துக்குப் பின்னர் நீங்கள் இவ்வுலகில் நேர்மறையாக நினைவுகூரப்படுவதற்கு இது உதவும். உங்களின் நற்செயல்கள் இவ்வுலகில் எத்தனை காலத்திற்கு நிலைநிற்கின்றதோ அத்தனை காலம்வரை உங்களுக்கான நன்மைகள் உங்கள் ஏட்டில் பதியப்பட்டுக் கொண்டே இருக்கும். உங்களின் சுயநலமற்ற செயல்பாடுகள் நாளை மறுமைநாள்வரை உங்களுக்குப் பயனுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.
7. திருமணம்
இது நபிவழியாகும். எனவே திருமணம் செய்வதன் மூலம் ஒரு நபிவழிக்கு உங்கள் மூலமாக உயிர் கொடுங்கள். உங்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் உயிர்கொடுக்க தோள்கொடுக்கத் தயாராகுபவரோடு அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவரைத் திருமணம் புரிந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு, நல்ல குழந்தைகளாக வளர்த்தால் அதற்காகவும் நீங்கள் நன்மை வழங்கப் படுவீர்கள். உங்களின் மரபுவழி நன்மைகளை வாழ வைப்பவர்களாகவும் தங்கள் நம்பிக்கையைச் செயல்படுத்துபவர்களாகவும் மனிதாபிமானத்தோடு இறைவனின் படைப்புகளைக் காணும் நல்ல மக்களாகவும் அவர்களை வளர்த்தெடுப்பது உங்களின் இலட்சியமாக இருக்கட்டும்.
8. மன்னிப்பு கேளுங்கள்
உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த தவறுகளை நினைவு கூர்ந்து, உங்களைப் படைத்தவன் முன்னிலையில் சிரம்பணியுங்கள். ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் முன், உங்கள் தவறுகளை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புக் கேளுங்கள். நீங்கள் யாருடைய மனதையாவது வேதனைப்படுத்தியுள்ளீர்களா? மக்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட நீங்கள் காரணமாக இருந்துள்ளீர்களா? யாருக்காவது தவறு இழைத்துள்ளீர்களா? இன்றே அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். நினைவில் வையுங்கள்: நீங்கள் தவறிழைத்தவர்கள் உங்களை மன்னிக்கும்வரை, அல்லாஹ் உங்களை மன்னிப்பதில்லை! வருத்தங்களைப் பொறுத்துக் கொள்ளப் பழகுங்கள். முன்னர் உங்கள் வாழ்வில் மற்றவர்களால் உங்களுக்கு நடந்த தவறுகளையும் மீட்டிப் பார்த்து அவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிக்க வேண்டுமெனில், நீங்கள் மற்றவர்களின் தவறுகளையும் மன்னிக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
9. கடன்களை அடையுங்கள்
நீங்கள் கடனாளி எனில், அது எத்துணைப் பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும் அவற்றைத் திருப்பிக் கொடுக்க இப்போதே திட்டமிடுங்கள். ஒரு நிமிடமும் இதற்காகத் தாமதிக்க வேண்டாம்! கடன் என்பது ஒரு வலி; அது ஒரு சுமையும் கூட! அதனை நிறைவேற்றவில்லையேல் அதற்காக மிகப்பெரிய பலனைத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். நினைவில் வையுங்கள்: நீங்கள் ஹஜ் செய்திருந்தால்கூட, நீங்கள் யாருக்காவது கடனாளியாக இருந்தால் உங்கள் ஹஜ் ஏற்றுக் கொள்ளப் படாமல் போகலாம். எம்பெருமானார், கடனாளியின் ஜனாஸாவுக்குத் தொழ வைக்க முன்வராததை எப்போதும் நினைவில் வையுங்கள்.
10. முன்னுதாரண மனிதராகுங்கள்
ஆமாம்! உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, முஸ்லிம்களுக்கு, முஸ்லிமல்லாதோருக்கு என அனைவருக்குமாக நீங்கள் நல்ல குணங்களுக்குச் சொந்தகாரரான ஒரு முன்னுதாரண மனிதராகுங்கள். அனைவரும் மரியாதையுடன் பார்க்கும் படியான மனிதராகுங்கள். மனிதர்கள் தங்களின் தேவைகளுக்காக உங்கள் பக்கம் திரும்ப வைக்கும்படியான நல்ல மனிதராகுங்கள். உங்கள் மரணத்துக்குப் பின்னரும் நல்ல காரணத்திற்காக நீண்ட காலம் மக்கள் நினைவுகூரும்படியான நற்பண்புகளுக்குச் சொந்தக்காரராக மாறுங்கள்.
இந்தப் பத்து விஷயங்களையும் உங்கள் மரணத்துக்கு முன் செயல்படுத்துங்கள். இவ்வுலக வாழ்க்கை என்பது மிகக் குறுகியது; எனவே இவற்றை உடனடியாகச் செயல்படுத்த ஆரம்பியுங்கள். நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள். செய்யும் செயலை அர்த்தமுள்ளதாகவும் ஒருபோதும் வருத்தப்படுத்தாததாகவும் செய்யுங்கள். மிக முக்கியமாக, உங்கள் செயல்களை இவ்வுலகிலும் மறு உலகிலும் ஒன்று போல் வெற்றிக்குரியனவாகத் தேர்ந்து செய்யுங்கள்.
எனவே, வெற்றிக்கான இந்தப் படிகளை உங்கள் மரணத்துக்கு முன்னர் செயல்படுத்த இப்போது உங்கள் முறை!. இவற்றை இன்றே, இப்போதே ஆரம்பித்து வெற்றியாளர்களாகத் திகழுங்கள்.
(நன்றி: www.therevival.co.uk என்ற ஆங்கிலத் தளத்தில் முஸ்லிம் சகோதரி ஒருவர் எழுதிய "Ten Things To Do Before You Die" என்ற கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.)