Friday, June 3, 2011

சினிமா பார்ப்பது தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு என்ன?

சினிமாநாடகங்கள் இவை போன்றவைகளை பார்ப்பது தொடர் பான இஸ் லாமிய நிலைப்பாடு என்ன என்பதை பலர் கேட்டுக் கொண் டிருக்கின்றனர். இவற்றை ஒரு முஸ்லிம் பார்க்கச் செல்வது கூடுமா?அல்லது ஹராமாகுமா என்றும் கேட்கின் றனர்.
எவ்வித சந்தேகமுமின்றி சினி மாவும் அதனைப்போன்ற ஊட கங்களும் ஏனைய பொருட்களைப் போன்றே அதன் பயன் பாட்டைப் பொருத்து ஹராமா அல்லது ஹலாலா என தீர்மா னிக்கப்படுகின்றது. அதனை நன் மையான வழியில் பயன்படுத்தினால் அடிப்படையில் எவ்விதப் பிரச்சினையுமில்லை. அதற்கான தீர்ப்பு ஏனைய விடயங்களைப் போன்றே அமையும். ஆனால்அதனை தீய வழியில் பயன்படுத்தினால் அது ஹராமானதாக அமைந்து விடும்
.
நாங்கள் சினிமாவை இவ்வாறு நோக்குவோம். அது பின்வரும் நிபந்தனை களை கொண்டிருந் தால் அது ஹலாலாக அமையும்.
1. அதன் தலைப்புகளும் அது உள்ளடக்கியுள்ள விடயங்களும் பாவத்தையும் மோசமானவற்றையும் விட்டு தூய்மையாக இருப்ப தோடு இஸ்லாமிய அகீதாவிற்கும் ஷரீஆவிற்கும் ஒழுக்கங்களுக்கும் முரண்படாததாக இருக்க வேண்டும். உலக ஆசைகளைத் தூண்டுகின்ற அல்லது பாவத்தைத் தூண்டுகின்ற அல்லது குற்றம் செய்யத் தூண்டுகின்ற அல்லது வழிகெட்ட சிந்தனைகளின்பால் அழைக்கின்ற அல்லது மோச மான நம்பிக்கைகளின்பால் தூண்டுகின்ற இவைபோன்ற நாம் அறிந்த விடயங்களைக் கொண்ட சினிமாக் களைப் பொறுத்தவரையில் அவை ஹராமானதாகும். அவற்றைப் பார்ப்பதோபார்க்கத் தூண்டுவதோ ஒரு முஸ்லிமுக்கு ஹராமானதாகும். ஏன் அத்தகைய வற்றைத் தயாரிப்பதும் அவற்றில் பங்கெடுப்பதும்கூட ஹராமானது தான்.
2. அவை மார்க்கக் கடமை யொன்றையோ உலகக் கடமை யொன்றையோ பொடுபோக் காக்கிவிடக்கூடாது. குறிப்பாக அல்லாஹுதஆலா முஸ்லிமின் மீது கடமையாக்கியுள்ள தொழுகைகளைவிட்டும் அது பொடு போக்காக் கிவிடக்கூடாது. ஒரு முஸ்லிமுக்கு மஹ்ரிப் தொழுகை போன்ற ஒரு தொழு கையை சினிமா பார்ப்பதற்காக பிற்படுத்த முடியாது. அல்லாஹுதஆலா கூறு கின்றான்தொழுகையாளிகளுக்கு கேடுதான்அவர்கள் தமது தொழு கைக ளில் பொடுபோக்காக இருக் கின்றனர்.
அத்துடன் அது தொழுகையை மறக்கடிக்கச் செய்துவிடவும் கூடாது. அத னால்தொழுகையின் நேரம் கடந்துவிடும். இதனை அல்குர்ஆன்மதுவையும் சூதாட்டத்தையும் தடுக்கின்றபோது ஒரே வார்த்தையில் கூறிவிட்டது. அதா வது அவை அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதைவிட்டும் தொழு கையை விட்டும் தடுத்துவிடு கிறது.
3. இவ்வாறான ஆகுமாக்கப் பட்ட சினிமாக்களைப் பார்க்க செல்வோரும் அஜ்னபியான ஆண்பெண்களுடன் கலந்துவிடக் கூடாது. ஏனெனில்அத னால் குழப்பமும் பாவங்களுக்கான அடிப்படையும் இடப்பட்டு விடும். குறிப்பாக இவ்வாறான நிகழ்வுகளின்போது கருப்புத் திரையொன்று போடப்பட வேண் டும். இமாம் தபரானிபைஹகி ஆகியோர் பின்வரும் ஹதீஸை பதிவு செய்துள்ளனர்நீங்கள் உங்களுக்கு ஹலாலாக்கப்படாத ஒரு பெண்ணை தொடுவதை விடவும் உங்கள் தலையில் இரும் பொன்றை அடித்துக் கொள்வது சிறந்ததாகும்.
கேள்விகேட்ட சகோதரருக்கு பின்வரும் விடயத்தை கூறிக் கொள்ள விரும்பு கின்றேன். இன்று காணப்படுகின்ற சினிமாக்கள் இத்தகைய எந்தவொழுக் கங்களையும் மதிப்பதில்லை. மாற்றமாக பாவங்களை செய் வதற்கும் நேரத்தைக் கொலை செய்வதற்குமே அடிப்படையாக அமைகின்றது.
ஹலால் தெளிவானதுஹரா மும் தெளிவானது. இன்று எல்லா வீடுகளிலும் நவீன தொடர்பாடல் சாதனங்களின் வசதியால் இத் தகைய விடயங்கள் நிறைந்துள்ளன. இத்தகைய சினிமாக்களில் நாடகங்களில் நடிப்பவர்களும் எவ்வித கண்ணியத்தையும் கொண் டிருப்பதில்லை.
அல்லாஹுத்தஆலாவிடம் எங்களுடைய மார்க்கத்தையும் எங்களுடைய உலக வாழ்வையும் பாதுகாக்குமாறு பிரார்த்திக்கின் றேன். அல்லாஹுதஆலா உதவி செய்பவன் அவனே மிகவும் அறிந் தவன்.
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இந்த பத்வா சினிமா பார்ப்பதை அங்கீகரிக்கின் றதென எவரும் கருதத் தேவையில்லை. இன்றைய சினிமாக்களில் 95% இற் கும் மேற்பட்டவை மேற்குறித்த எந்தவரை யறைகளையும் பொருட்படுத்தா தவை. எனவே,அவற்றைப் பார்ப்பதோ ஏனையவர்கள் பார்ப்பதற்குத் தூண்டு வதோ ஹராமானதாகும் என்பதையே இந்த பத்வா தெளிவுபடுத்துகின்றது.

இணையத்தளம் மூலம் ஆணும் பெண்ணும் உரையாடலாமா?

ஆணும் பெண்ணும் இன்டர்நெட் மூலமாக வரையறைகளைப் பேணி உரை யாடலாமா? (CHAT)

அல்லாஹுத்தஆலா ஷைத்தானின் சுவடுகளை பின்பற்றுவதை தடை செய்துள்ளான் என்பதை நாம் அறிந்ததே. ஹராத்தில் விழக் கூடியஹராத் திற்கு இட்டுச் செல்லக்கூடிய அனைத்தும் தடுக் கப்பட்டுள்ளது. சிலவேளைஅதன் அடிப்படை ஆகுமாக இருந்தாலும்கூட. இதனை உல மாக்கள் தீமை யைத் தடுப்பதற் கான அடிப்படை என கூறுகின்றனர்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்விசுவாசம் கொண்டோரே நீங்கள் ஷைத் தானின் சுவடுகளை பின்பற்ற வேண்டாம். (நூர்: 21) நீங்கள் அல்லாஹ்வை அன்றி ஏனையவற்றை வணங்குவோரை ஏச வேண்டாம். அவர்கள் எவ் வித அறிவுமின்றி அல்லாஹ்வை ஏசுவார்கள். (அன்ஆம்: 108)
இந்த வசனத்தில் அல்லாஹுத் தஆலா முஃமின்களை இணை வைப்பாளர் களை ஏசுவதைவிட்டு தடுத்திருக்கின்றான். ஏனெனில்அதன்மூலம் அந்த இணைவைப் பாளர்கள் தூய்மையான இரட்சகனைஅல்லாஹ்வை ஏசுவார் கள்.
இந்த அடிப்படைக்கான நிறைய உதாரணங்கள் ஷரீஆவில் காணப்படுகின்றன. எங்களுடைய இந்தப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் அதாவதுஒரு ஆணும் பெண்ணும் வரையறைகளோடு பேசுவது அல்லது எழுத்தின் மூலம் தொடர்புகொள்வது ஆகு மானதாகும். என்றாலும்அது ஷைத்தானின் வலையில் விழுந்து விடுவதற்கு காரணமாக அமைந்து விடலாம்.
யார் தனது உள்ளத்தில் பலவீ னத்தை காண்கின்றாரோ தான் ஷைத்தானின் வலையில் விழுந்து விடுவேன் என்று அஞ்சுகின் றாரோ அவர் இவ்வாறு பேசுவது கூடாது. அவர் தன்னைப் பாது காத்துக் கொள்ளவேண்டும். யார் தனது உள்ளத்தில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருக்கின் றாரோ அத்தகை யவர் பின்வரும் நிபந்தனைகளுடன் உரையாட லாம் என்று எமக்குக் கூற லாம்.
1. குறித்த விடயத்திற்கு அப்பால் அதிகமாகப் பேசுவதை தவிர்ந்துகொள்ளல். (தஃவா விடயம்அல்லது ஏனைய விட யங்கள்)
2. குரலை மென்மைப்படுத்து வதை அல்லது நளினமாகப் பேசுவதைத் தவிர்த்தல்.
3. தனிப்பட்ட விடயங்கள் தொடர் பாக கேள்வி கேட்காதிருத்தல்உதாரணமாக வயதுஉயரம்வசிப்பிடம் போன்றவற்றைக் கூறலாம்.
4. பேசும்போது அல்லது எழு தும்போது ஆணாக இருந்தால் சகோதரர்கள் யாரேனும் பெண் ணாக இருந்தால் சகோதரிகள் யாரேனும் இருப்பது சிறந்த தாகும்.
5. உள்ளம் இச்சையின்பால் செல் வதை உணர்ந்தால் உடனடி யாக உரையாடலை நிறுத்தி விட வேண்டும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
அஷ்ஷெய்க்
அப்துல் ஹை யூஸுப்