ஆணும் பெண்ணும் இன்டர்நெட் மூலமாக வரையறைகளைப் பேணி உரை யாடலாமா? (CHAT)
அல்லாஹுத்தஆலா ஷைத்தானின் சுவடுகளை பின்பற்றுவதை தடை செய்துள்ளான் என்பதை நாம் அறிந்ததே. ஹராத்தில் விழக் கூடிய, ஹராத் திற்கு இட்டுச் செல்லக்கூடிய அனைத்தும் தடுக் கப்பட்டுள்ளது. சிலவேளை, அதன் அடிப்படை ஆகுமாக இருந்தாலும்கூட. இதனை உல மாக்கள் தீமை யைத் தடுப்பதற் கான அடிப்படை என கூறுகின்றனர்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்; விசுவாசம் கொண்டோரே நீங்கள் ஷைத் தானின் சுவடுகளை பின்பற்ற வேண்டாம். (நூர்: 21) நீங்கள் அல்லாஹ்வை அன்றி ஏனையவற்றை வணங்குவோரை ஏச வேண்டாம். அவர்கள் எவ் வித அறிவுமின்றி அல்லாஹ்வை ஏசுவார்கள். (அன்ஆம்: 108)
இந்த வசனத்தில் அல்லாஹுத் தஆலா முஃமின்களை இணை வைப்பாளர் களை ஏசுவதைவிட்டு தடுத்திருக்கின்றான். ஏனெனில், அதன்மூலம் அந்த இணைவைப் பாளர்கள் தூய்மையான இரட்சகனை, அல்லாஹ்வை ஏசுவார் கள்.
இந்த அடிப்படைக்கான நிறைய உதாரணங்கள் ஷரீஆவில் காணப்படுகின்றன. எங்களுடைய இந்தப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் அதாவது, ஒரு ஆணும் பெண்ணும் வரையறைகளோடு பேசுவது அல்லது எழுத்தின் மூலம் தொடர்புகொள்வது ஆகு மானதாகும். என்றாலும், அது ஷைத்தானின் வலையில் விழுந்து விடுவதற்கு காரணமாக அமைந்து விடலாம்.
யார் தனது உள்ளத்தில் பலவீ னத்தை காண்கின்றாரோ தான் ஷைத்தானின் வலையில் விழுந்து விடுவேன் என்று அஞ்சுகின் றாரோ அவர் இவ்வாறு பேசுவது கூடாது. அவர் தன்னைப் பாது காத்துக் கொள்ளவேண்டும். யார் தனது உள்ளத்தில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருக்கின் றாரோ அத்தகை யவர் பின்வரும் நிபந்தனைகளுடன் உரையாட லாம் என்று எமக்குக் கூற லாம்.
1. குறித்த விடயத்திற்கு அப்பால் அதிகமாகப் பேசுவதை தவிர்ந்துகொள்ளல். (தஃவா விடயம், அல்லது ஏனைய விட யங்கள்)
2. குரலை மென்மைப்படுத்து வதை அல்லது நளினமாகப் பேசுவதைத் தவிர்த்தல்.
3. தனிப்பட்ட விடயங்கள் தொடர் பாக கேள்வி கேட்காதிருத்தல், உதாரணமாக வயது, உயரம், வசிப்பிடம் போன்றவற்றைக் கூறலாம்.
4. பேசும்போது அல்லது எழு தும்போது ஆணாக இருந்தால் சகோதரர்கள் யாரேனும் பெண் ணாக இருந்தால் சகோதரிகள் யாரேனும் இருப்பது சிறந்த தாகும்.
5. உள்ளம் இச்சையின்பால் செல் வதை உணர்ந்தால் உடனடி யாக உரையாடலை நிறுத்தி விட வேண்டும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
அஷ்ஷெய்க்
அப்துல் ஹை யூஸுப்
No comments:
Post a Comment
Please Don't Forget Write Your Comments