Friday, June 3, 2011

சினிமா பார்ப்பது தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு என்ன?

சினிமாநாடகங்கள் இவை போன்றவைகளை பார்ப்பது தொடர் பான இஸ் லாமிய நிலைப்பாடு என்ன என்பதை பலர் கேட்டுக் கொண் டிருக்கின்றனர். இவற்றை ஒரு முஸ்லிம் பார்க்கச் செல்வது கூடுமா?அல்லது ஹராமாகுமா என்றும் கேட்கின் றனர்.
எவ்வித சந்தேகமுமின்றி சினி மாவும் அதனைப்போன்ற ஊட கங்களும் ஏனைய பொருட்களைப் போன்றே அதன் பயன் பாட்டைப் பொருத்து ஹராமா அல்லது ஹலாலா என தீர்மா னிக்கப்படுகின்றது. அதனை நன் மையான வழியில் பயன்படுத்தினால் அடிப்படையில் எவ்விதப் பிரச்சினையுமில்லை. அதற்கான தீர்ப்பு ஏனைய விடயங்களைப் போன்றே அமையும். ஆனால்அதனை தீய வழியில் பயன்படுத்தினால் அது ஹராமானதாக அமைந்து விடும்
.
நாங்கள் சினிமாவை இவ்வாறு நோக்குவோம். அது பின்வரும் நிபந்தனை களை கொண்டிருந் தால் அது ஹலாலாக அமையும்.
1. அதன் தலைப்புகளும் அது உள்ளடக்கியுள்ள விடயங்களும் பாவத்தையும் மோசமானவற்றையும் விட்டு தூய்மையாக இருப்ப தோடு இஸ்லாமிய அகீதாவிற்கும் ஷரீஆவிற்கும் ஒழுக்கங்களுக்கும் முரண்படாததாக இருக்க வேண்டும். உலக ஆசைகளைத் தூண்டுகின்ற அல்லது பாவத்தைத் தூண்டுகின்ற அல்லது குற்றம் செய்யத் தூண்டுகின்ற அல்லது வழிகெட்ட சிந்தனைகளின்பால் அழைக்கின்ற அல்லது மோச மான நம்பிக்கைகளின்பால் தூண்டுகின்ற இவைபோன்ற நாம் அறிந்த விடயங்களைக் கொண்ட சினிமாக் களைப் பொறுத்தவரையில் அவை ஹராமானதாகும். அவற்றைப் பார்ப்பதோபார்க்கத் தூண்டுவதோ ஒரு முஸ்லிமுக்கு ஹராமானதாகும். ஏன் அத்தகைய வற்றைத் தயாரிப்பதும் அவற்றில் பங்கெடுப்பதும்கூட ஹராமானது தான்.
2. அவை மார்க்கக் கடமை யொன்றையோ உலகக் கடமை யொன்றையோ பொடுபோக் காக்கிவிடக்கூடாது. குறிப்பாக அல்லாஹுதஆலா முஸ்லிமின் மீது கடமையாக்கியுள்ள தொழுகைகளைவிட்டும் அது பொடு போக்காக் கிவிடக்கூடாது. ஒரு முஸ்லிமுக்கு மஹ்ரிப் தொழுகை போன்ற ஒரு தொழு கையை சினிமா பார்ப்பதற்காக பிற்படுத்த முடியாது. அல்லாஹுதஆலா கூறு கின்றான்தொழுகையாளிகளுக்கு கேடுதான்அவர்கள் தமது தொழு கைக ளில் பொடுபோக்காக இருக் கின்றனர்.
அத்துடன் அது தொழுகையை மறக்கடிக்கச் செய்துவிடவும் கூடாது. அத னால்தொழுகையின் நேரம் கடந்துவிடும். இதனை அல்குர்ஆன்மதுவையும் சூதாட்டத்தையும் தடுக்கின்றபோது ஒரே வார்த்தையில் கூறிவிட்டது. அதா வது அவை அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதைவிட்டும் தொழு கையை விட்டும் தடுத்துவிடு கிறது.
3. இவ்வாறான ஆகுமாக்கப் பட்ட சினிமாக்களைப் பார்க்க செல்வோரும் அஜ்னபியான ஆண்பெண்களுடன் கலந்துவிடக் கூடாது. ஏனெனில்அத னால் குழப்பமும் பாவங்களுக்கான அடிப்படையும் இடப்பட்டு விடும். குறிப்பாக இவ்வாறான நிகழ்வுகளின்போது கருப்புத் திரையொன்று போடப்பட வேண் டும். இமாம் தபரானிபைஹகி ஆகியோர் பின்வரும் ஹதீஸை பதிவு செய்துள்ளனர்நீங்கள் உங்களுக்கு ஹலாலாக்கப்படாத ஒரு பெண்ணை தொடுவதை விடவும் உங்கள் தலையில் இரும் பொன்றை அடித்துக் கொள்வது சிறந்ததாகும்.
கேள்விகேட்ட சகோதரருக்கு பின்வரும் விடயத்தை கூறிக் கொள்ள விரும்பு கின்றேன். இன்று காணப்படுகின்ற சினிமாக்கள் இத்தகைய எந்தவொழுக் கங்களையும் மதிப்பதில்லை. மாற்றமாக பாவங்களை செய் வதற்கும் நேரத்தைக் கொலை செய்வதற்குமே அடிப்படையாக அமைகின்றது.
ஹலால் தெளிவானதுஹரா மும் தெளிவானது. இன்று எல்லா வீடுகளிலும் நவீன தொடர்பாடல் சாதனங்களின் வசதியால் இத் தகைய விடயங்கள் நிறைந்துள்ளன. இத்தகைய சினிமாக்களில் நாடகங்களில் நடிப்பவர்களும் எவ்வித கண்ணியத்தையும் கொண் டிருப்பதில்லை.
அல்லாஹுத்தஆலாவிடம் எங்களுடைய மார்க்கத்தையும் எங்களுடைய உலக வாழ்வையும் பாதுகாக்குமாறு பிரார்த்திக்கின் றேன். அல்லாஹுதஆலா உதவி செய்பவன் அவனே மிகவும் அறிந் தவன்.
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இந்த பத்வா சினிமா பார்ப்பதை அங்கீகரிக்கின் றதென எவரும் கருதத் தேவையில்லை. இன்றைய சினிமாக்களில் 95% இற் கும் மேற்பட்டவை மேற்குறித்த எந்தவரை யறைகளையும் பொருட்படுத்தா தவை. எனவே,அவற்றைப் பார்ப்பதோ ஏனையவர்கள் பார்ப்பதற்குத் தூண்டு வதோ ஹராமானதாகும் என்பதையே இந்த பத்வா தெளிவுபடுத்துகின்றது.

No comments:

Post a Comment

Please Don't Forget Write Your Comments