Thursday, April 21, 2011

ஒரு மிஸ் கோல்...!

ஒரு மிஸ் கால்

பாதையில் ஊரும் பாம்பை பிடித்து தனது பைக்குள் போட்டுக் கொண்டது போல் தான் மொபைல் போன்களை நாம் எமது சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு அலைகின்றோம்.

ஒரு சிறிய மிஸ் கோல் என்றால் உடனே என்ன, அல்லது எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அதை பார்த்துவிட்டுத் தான் அல்லது விடையளித்துவிட்டுத்தான் அடுத்த விடயத்திற்கு எங்களை திசைதிருப்புகின்றோம்.

எமது கையிலிருக்கும் அந்த மொபையில் எந்தளவு எமக்கு பயனளிக்கின்றது என்று எம்மால் உறுதிப்படுத்துகின்றோமா என்றால் சத்தியமாக இல்லை.

சிலருக்கு எந்த வருமானமும் இருக்காது, ஆனால் பல கோல்கள் வந்துகொண்டே இருக்கும், பல்லாயிரக்கணக்கான பணத்தை செலவளித்து அதை வாங்கி பாவிக்கின்றோம்.



நாம் கடுமையான வேலையில் சிக்கி கடும் கஸ்டத்தில் வந்து தூங்குவோம், நல்ல ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது சிறிதாக ஒரு மிஸ் கோல் வந்துவிட்டால் ஏதோ தூக்கத்தில் பாம்பு கடித்துவிட்டது போல் அல்லது சுனாமி வந்தது போல் அசிர்ச்சியுற்று எழும்புகின்றோம், உடனே பதிலளிக்க முடிகின்றோம்.


அப்படியென்றால் எமது வீட்டுக்கு பக்கத்திலிருக்கும், எம்மை படைத்த, எமக்கு உணவளிக்கின்ற, எமக்கு நல்ல தூக்கத்தை தந்த அந்த அல்லாஹ்வின் வீட்டிலிருந்து அழைப்பு வருகின்றது அந்த அதிகாலை “சுபஹ்” வேளை, ஆனால் நாம் அயர்ந்து, ஆழ்ந்து தூங்குகின்றோம்.

ஒரு மிஸ் கோல் (Missed called)க்கு ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்தெழும்புகின்றோம்

ஆனால் பெறிய சத்தத்தில் அழைப்பு கேற்கின்றது, “வெற்றியின் பக்கம் வாருங்கள்” என அழைக்கப்படுகின்றது ஆனால் நாம் செவிடர்கலாக தூங்குகின்றோம்.

وَاسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلاَّ عَلَى الْخَاشِعِينَ [البقرة : )]

"பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்"

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ إِنَّ اللّهَ مَعَ الصَّابِرِينَ [البقرة : 153)]

"நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்”.

இவைகள் சிந்தனைக்கான சில வரிகள் மட்டும

No comments:

Post a Comment

Please Don't Forget Write Your Comments