யுவான் ரெட்லி ஒரு பிரிட்டானிய பத்திரிகையாளர் 2001 அக்டோபர் 7ல் ஆப்கான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு 10நாட்களுக்கு முன்பு ஆப்கானுள் நுழைந்து அங்குள்ள மக்கள் எவ்வாறு யுத்தத்திற்கு முகம் கொடுக்கத் தயாராகின்றார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காகச் சென்ற போது பல நாட்கள் சிறை வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் விடுதலை செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னால் இஸ்லாத்தை தழுவினார்.இஸ்லாத்தை ஏற்றதால் இவரது கணவர் பிரிந்து சென்று விட்டார் பின்னர் அல்-ஜீரியாவைச் சேர்ந்த ஹாபிழ் ஒருவரை அல்-குர்ஆனின் 10சூராக்களை மஹாராகப் பெற்று திருமணம் செய்து கொண்டார். இஸ்லாத்தை ஆழ்ந்து கற்றதன் பின்னால் ஏற்றுக்கொண்ட இவர் தெளிந்த சிந்தனையுடன் இஸ்லாமிய உம்மத்தின் விவரங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
No comments:
Post a Comment
Please Don't Forget Write Your Comments